கடைவீடு

ஜாலான் புசார் வட்டாரத்திலுள்ள ஒரு கடைவீட்டின் சுவரில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து சீன உணவுக் கடை ஒன்று மூடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் $3 பில்லியன் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சீன நாட்டவர் இருவருக்குச் சொந்தமான பத்து கடை வீடுகளை டிபிஎஸ் வங்கி விற்பனைக்கு விட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சுறுசுறுப்பாக இருந்த கடைவீடு விற்பனைச் சந்தை தற்பொழுது மெதுவடைந்துள்ளது. நடந்து முடிந்த 2023ஆம் ஆண்டில் $1.14 பில்லியனுக்கு 131 கடைவீடுகள் கைமாறின. ஒப்புநோக்க, 2022ஆம் ஆண்டு $1.6 பில்லியனுக்கு 191 கடைவீடுகள் கைமாறின.
கேலாங் கடைவீடு ஒன்று திங்கட்கிழமையன்று தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து அது தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று புதன்கிழமையன்று கட்டட, கட்டுமான ஆணையம் (பிசிஏ) தெரிவித்தது.
குடியிருப்புச் சொத்து வாங்குவோருக்கான கூடுதல் முத்திரை வரி உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், வர்த்தகக் கடைவீடுகளின் விற்பனை இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ளது.